எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை.மார்ச்.16 - தன்னையும் -நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து சன் டிவி, நக்கீரன் வெளியிட்ட வீடியோ பட காட்சிகள் போலியானவை சித்தரிக்கப்பட்டவை என்பதை அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு இணையான தடவியல் நிபுணர்கள் 4 பேர் சோதனையிட்டு உறுதிபடுத்தி உள்ளனர் என்று நித்தியானந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாமி நித்தியானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.மூன்று விஷயங்களுக்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன்.கடந்தமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது லெனின் கருப்பன் தலைமறைவாக இருந்ததால் அவரைப்பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசில் சரணடைந்ததால் ஆதாரங்களை திரட்டி வெளியிடுகிறோம்.முதலில் வீடியோ முற்றிலும் பொய் என்று எஃப்.பி.ஐ(அமெரிக்கா உளவு பிரிவு) லேப் டெக்னீஷியன் 4 கைதேர்ந்த நிபுணர்கள் மூலமாக ரிப்போர்ட் தயார் செய்து அறிக்கை வந்துள்ளது.60 காரணங்களை வெளியிட்டு சித்தரிக்கப்பட்டது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அவர்கள் 4 பேரும் இந்திய நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவும் தயாராக இருக்கிறார்கள்.இந்திய சட்டப்படி அமெரிக்க எக்ஸ்பர்ட் சாட்சியம் ஏற்று கொள்ள தயாராக இருப்பது முக்கிய அம்சம். சன் டிவி பிரபலமான டிவி இதன் வெளியிடப்பட்ட காட்சிகளை நிபுணர்கள் எடுத்து சோதித்துள்ளனர் வீடியோ உண்மைகள் காட்சிகள் இயற்கையானது அல்ல அவதூறு செய்யும் வகையில் வெட்டியும் ஒட்டியும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி உள்ளனர் நான்கு பேரின் நடைமுறைகளும் அமெரிக்க புலனாய்வு தரத்துக்கு இணையானது.58 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய பாரன்ஸிக் நிறுவனத்தில் பணிபுரிந்த நிபுணர் ஒருவர் ஆவார். அவர்கள் அளித்த அறிக்கையில் சில விஷயங்களை டெக்னிக்கல் சைடில் காட்சிகளை வெட்டியும் ஒட்டப்பட்டுள்ளதாக லேயர்கள் எப்படி இணையாமல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்திய தடவியல் துறை அறிக்கை எவ்வாறு மோசமானது என்பதை வரிக்கு வரி விமர்சித்துள்ளனர்.காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியும் மாற்றி மாற்றி ஒளிபரப்பினார்கள். 2ஜி விவகாரமான சுவாமிஜி படத்தை போட்டு ஜனங்களை திசைமாற்று. நாட்டை கொள்ளை அடித்துவிட்டு அதன்மூலம் சிக்கல் ஏற்பட்டால் உடனே திசைதிருப்ப சாமியின் ஆசிரமங்களை அடித்து உடை என்ற முறையில் செயல்பட்டனர். கலாநிதிமாறன் என்ற தனிப்பட்ட மனிதனின் விருப்பத்திற்கு சன் டிவி என்ற நிறுவனத்தின் நம்பக தன்மை கெடுக்கப்படுகிறது. இவர்கள் மீது 32 நாடுகளில் வழக்கு தொடுக்க உள்ளேன். சன் டிவிக்கு பிரச்சனை வந்தால் தீனி போட நானா கிடைத்தேன். இரண்டாவதாக பிரசன்னா போலீஸ் விசாரணையில் பல விசயங்களை ஒத்துகொண்டார். நாங்கள் மறந்து போன சில விஷயங்களை பிரசன்னா வெளியிட்டார். ஐயப்பன் பணம் பிடுங்கியதை ஒப்பு கொண்டார் அந்த நேரம் யார் யார் இருந்தனர் என்பதையும் கூறியுள்ளார்.சக்சேனாவும் பல விஷயங்களை ஒத்து கொண்டுள்ளார். இப்போது லெனின் கைதாகி உள்ளார் லெனின் கருப்பனுக்கு எஃப்.பி.ஐ யில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு உள்ளதை நிரூபிக்க ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. லெனின் கருப்பன் காந்தப்படுக்கை வழக்கில் தொடர்புடையவர். அவர் ஆசிரமத்திற்கு வந்த பிறகு அவருக்கு வேண்டியப்பட்ட பலரை பல வேலைகளில் அமர்த்தியுள்ளார் அதற்கான ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதை என்னுடைய பர்செனல் செகரட்டரி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். ரூ35 கோடி கேட்டு மிரட்டினார்கள். முதலில் 200 கோடிகேட்டு மிரட்டினார்கள் பின்னர் 60 கோடியாக குறைத்தார்கள் நாங்கள் ஒத்து கொள்ளவில்லை.கலாநிதி மாறன் தயாநிதிமாறன் மேல் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 80 சதவித வழக்குகளில் தண்டனை பெற்றுதந்துள்ளனர். கலாநிதிமாறனுக்கும் கோபாலுக்கும் சொல்வது நீங்கள் என்மேல் போட்டது காமெடி வழக்கு இனிமேல் தான் இருக்குது ரியல் வழக்கு. மாறன் தி.மு.க மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மூலம் எங்கள் மீது 20 வழக்குகள் போட்டார் எதுவும் நிற்கவில்லை.எனது துணியை கூட புலித்தோல் என்று வழக்குபோட்டு இப்போது வழக்கை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மொத்தம் நூறு வழக்குகள் போட்டார்கள் சாமியார்கள் என்றால் கிள்ளு கீரையா? அட்டுளியத்திற்கும் ஒரு அளவில்லையா பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா இவர்கள் இழைத்த கொடுமை தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஐபிக்களும் இவர்கள் ரத்தத்தை உறிஞ்சி போட்ட எலும்பு கூடுகள் தான்.தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு எவ்வித அரசியல் குறுக்கீடு இல்லாமல் வழக்கு நடந்துவருகிறது.லெனின் கருப்பன் மீது வழக்கு தொடரந்துள்ளோம் இந்த வழக்கில் சன் டிவி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் மானநஷ்ட வழக்கு கட்டாயம் போடுவேன். இவர்கள் அபரிக்க முயற்சித்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்று போன வாரம் தீர்ப்பு வந்துள்ளது. சன் டிவி, தினகரன், நக்கீரன் கோபால், காமராஜ் மீது வருங்காலத்தில் மானநஷ்ட வழக்கு போடுவோம் இவ்வாறு பிரேமானந்தா கூறினார்.
ஐயப்பன் மூலம் சக்சேனா நக்கீரன் கோபால்- காமராஜ் மிரட்டினர் - நடிகை ரஞ்சிதா
தன்னிடம் தொடர்பு கொண்ட ஐயப்பன் மூலம் சக்சேனாவும், நக்கீரன் கோபாலும், காமராஜும் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ரஞ்சிதா கூறினார்.
மேலும் சக்சேனா அவ்வளவு பணம் ரஞ்சிதாவிடம் இருக்காது. அவரது ஆரீகனைசேஷனில் பேசி வாங்கி தர சொல்லுங்கள் என்று தனது ஆடிட்டரிடம் சொல்லி அனுப்பியதாக ரஞ்சிதா கூறினார். பேட்டி முழுவதும் ரஞ்சிதா இறுக்கமாகவே காணப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் சமாதான தூது - நித்தியானந்தா பேட்டி
நித்தியானந்தா தனது பேட்டியில், அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் வந்தபோது என் பக்தர் ஒருவர் மூலம் சுவாமிஜியிடம் தங்களுக்கும் இந்த விவகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. கலைஞர் டி.வி.யில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகாது. இதை சுவாமிஜியிடம் நான் சொன்னதாக கூறுங்கள் என்று ஸ்டாலின் சொல்லி அனுப்பியதாக நித்தியானந்தர் தெரிவித்தார்.
வீடியோவை ஆராய்ந்த நிபுணர்கள் விபரம்
1. எட்வர்ட் ஜோ: ஆடியோ வீடியோ தடய அறிவியல் துறை நிபுணர் நீதிமன்ற எக்ஸ்பர்ட். 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
2. பிரயன் நியூமீஸ்டர் : தடயவியல் துறை எக்ஸ்பர்ட் 31 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
3. டேவிட் நோடோவிட்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்பீரியர் பாரன்ஸிக் சையின்டிஸ்ட்.
4. ஜோ யூனோவிட்ஸ் 58 ஆண்டுகள் தடயவியல் துறையில் அனுபவம் பெற்ற நிபுணர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.