முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்ய ஆசை: சிம்பு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.20 - பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டு அழகான குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் சிம்பு கூறியுள்ளார். இது குறித்து நடிகர் சிம்பு நிருபர்களிடம். அவர் கூறியதாவது:- என்னோட திருமணம் எப்போது என்று மீடியாவில் உள்ளவர்கள் கேட்டு வருகிறார்கள். அது பற்றி நானும் முடிவு எடுத்திருக்கிறேன். தற்போது நடித்து வரும் ``வேட்டைமன்னன்'' மற்றும் ``போடா-போடி'' ஆகிய இரண்டு படங்கள், மற்றும் ஆல்பம் வேலைகள் சிறப்பாக வரவேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். இது முடிந்த பிறகு அடுத்த ஆண்டு நிச்சயம் என் திருமணம் நடக்கும். இது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்யும் திருமணமாகத்தான் இருக்கும். கடந்த 2009 -ம் ஆண்டு காதலில் விழுந்தேன். 

(நடிகர் சிம்பு நடிகை நயன்தாராவை காதலித்தார் என்பது குறிப்பிடதக்கது) அது ஒரு தலையாக முடிந்து விட்டது. அதன் பிறகு காதலில் ஈடுப்பட்டு நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை. எனக்கு அமையக்கூடிய பெண் அழகானபெண்ணாக இருக்க வேண்டும் அழகான குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இதை என் அம்மாவிடம் தெரிவித்துள்ளேன். அது நடக்கும். 

இந்த வயதில் அனைத்து வெளிநாடுகளுக்கும் சென்று வந்து விட்டேன். அனுபவிக்கக்கூடிய விஷயங்களையும்  அனுபவித்துவிட்டேன். இனி வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் இப்போதைக்கு இதுதான் என்னோட இலக்கு. இவ்வாறு சிம்பு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்