தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரூர்,மார்ச்.- 28 - அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் நகர பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண்பேன் என்று ஜெயலலிதா உறுதி கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று நான்காம் நாளாக அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஜெயலலிதா நேற்று கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் ஜெயலலிதாவுக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழிநெடுக ஆண்களும், பெண்களும் பெரும் திரளாக கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தில் ஜெயலலிதா பேசியதாவது:- அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ரத்து செய்யப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தாய்மார்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் திருமண உதவித் திட்டமும் வழங்கப்படும். வீடு இரல்லாதவர்களுக்கு மூன்று சென்ட் இடம் வழங்கப்படும். 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும். விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் வசதி செய்து கொடுக்கப்படும். தாய்மார்களுக்கு பேன், மிக்ஸி, கிரைண்டர் மூன்றும் இலவசமாக வழங்குவோம்.
இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட் டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
அதுபோல்கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.3லிருந்து, ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தாததால் மின்மிகை நாடு மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது.
இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் உற்பத்தியும் குறைந்துவிட்டது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. தமிழக பொருளாதாரம் நசிந்துவிட்டது. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கிஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.
கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். கரூரில் மணல் கொள்ளையில் ஒரு பெரும் புள்ளி ஈடுபட்டிருப்பது தெரியும். விரைவில் கட்டப்படாத பாலம் கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு கரூர் வந்த அவரை தம்பித்துரை எம்.பி,, செங்கோட்டையன் ஆகியோர் வரவேற்றனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவிற்கு பெண்கள் கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பளித்தனர். வழிநெடுகிலும் ஜெயலலிதாவிற்கு தாய்மார்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை உள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 May 2022ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை
24 May 2022சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 பார்லி. தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு : நாடு தழுவிய பேரணி நடத்தவும் திட்டம்
24 May 2022புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா
-
மக்கள் அச்சப்பட தேவையில்லை: குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிர கண்காணிப்பு : அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
24 May 2022கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கோரியதாக புகார்: பஞ்சாப் சுகாதார அமைச்சர் டிஸ்மிஸ் : முதல்வர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு
24 May 2022சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவு: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
-
சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள்: கொலைநகராக மாறும் தலைநகர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
24 May 2022கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று க
-
சர்வதேச யோகா தினத்தில் மைசூரில் 21-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
24 May 2022புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் : பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
24 May 2022புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
-
15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல்பாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராட்டு
24 May 2022டோக்கியோ : கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு
24 May 2022கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.