முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் மெயில் ரயில் தடம்புரண்டு 19 பயணிகள் படுகாயம்

திங்கட்கிழமை, 7 மே 2012      இந்தியா
Image Unavailable

ரோஹ்டாக், மே - 7- பெரோஸ்பூரிலிருந்து  மும்பைக்கு சென்று கொண்டிருந்த பஞ்சாப் மெயில் ரயில் அரியானா மாநிலம் ரோஹ்டாக் மாவட்டத்தில் உள்ள  கராவத் என்ற கிராமத்திற்கு அருகே திடீரென்று தடம்புரண்டது. இதில் 8 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகின. இந்த விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு  ரோஹ்டாக் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ரயில் தடம்புரண்டதால் அந்த பகுதியில்  ரயில் தண்டவாளத்தில் 300 மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சேதத்தை சரிப்படுத்தினர்.
இந்த விபத்து ஏன், எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்