முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்ம மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

 

கோழிக்கோடு, மே.13 - கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வாழிக்கடவு என்ற கிராமத்தில் ஒரு வீட்டிற்கு அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவரது பிணம் மரத்தில் தொங்கி கொண்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அந்த பிணத்தை கைப்பற்றிய போலீசார் அந்த நபரின் வீட்டை  சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் மேலும் 4 பேரின் சடலங்கள் கிடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் 4 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன.

தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று விட்டு அந்த நபர் மரத்தில் தூக்கு போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நபர் ஒரு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் கடந்த 6 நாட்களாக இவர் வேலைக்கு செல்லவில்லை என்றும்  குடும்பத்தகராறு காரணமாக அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இருந்தாலும் இந்த மர்ம சாவுகளுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்