முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைஆதீன மடத்தை அரசே ஏற்க ஐகோர்ட்டில் வழக்கு

புதன்கிழமை, 23 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, மே.24 - மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி பொதுநல மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
மதுரை ஆதீனத்தில் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நித்யானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைய துறைக்கு மனு கொடுத்தேன். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து பதில் அளிக்குமாறு இந்து அறநிலைய துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்