முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

திங்கட்கிழமை, 28 மே 2012      அரசியல்
Image Unavailable

 

புதுக்கோட்டை. மே.29 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 12ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 32 அமைச்சர்கள்  முகாமிட்டு அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டானுக்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றது. அதிமுக அரசின் செயல்திட்டங்களையும், ஓராண்டில் சாதனை படைத்த திட்டத்தினையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பட்டி கிராமத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் செங்கோட்டையான், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் உள்ளம் கவர்ந்த அம்மாவின் நல்லாட்சியில் தமிழகம் தலைநிமிர்ந்து வெற்றி நடைபோட்டிட தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யும்படி மக்களை அன்போடு கேட்டுக்கொண்டார். 

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தலைவர் பி.சின்னப்பா, புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் வெ.மு.குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், வாண்டையாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.மதியழகன், வளவை நாகராசு, ரவி மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்