முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் நித்யானந்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 20 - மதுரையில் நித்யானந்தாவுக்கு ஆதரவாக கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெங்களூர் பிடதிஆசிரமத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து கர்நாடக போலீசார் நித்யானந்தாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நித்யானந்தாவை கைது செய்த கர்நாடக அரசை கண்டித்து அகில பாரத இந்து மகாசபா, இந்து எழுச்சி இயக்கம், இந்து மக்கள் கட்சி ஆகிய இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மாகசபா மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்லத்துறை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து மாகசபா மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் ராம்தாஸ், ராம்ஜி உள்பட 50 -க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர் மேலும் அதே இடத்தில் நேற்று நித்யானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்