முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் பணப்பட்டுவாடா செய்த 2 தி.மு.க.வினர் கைது

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.1 - திருப்பரங்குன்றத்தில் தொண்டர்களுக்கு தலா ரூ 100 வழங்கிய தி.மு.க. கிளை செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியின் மறைவிடத்தில் மேலக்குயில்குடி தி.மு.க. கிளை செயலாளர் போஸ் ஆண்டி(65) மற்றும் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் ஜெயப்பிரபு(28) இருவரும் தொண்டர்களுக்கு தலா ரூ 100 வீதம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதை தூரத்தில் இருந்து கவனித்த தேர்தல் பறக்கும் படையினர் விரைந்து வந்து போஸ் ஆண்டி மற்றும் ஜெயப்பிரபு இருவரையும் சோதனையிட்டனர். 

அப்போது அவர்கள் கையில் ரூபாய் நோட்டுக்கட்டு இருந்தது. அவர்கள் தொண்டர்களிடம் பணம் கொடுத்ததை தேர்தல் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் விசாரணை செய்து அவர்களை திருப்பரங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.  

திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி நகர காங்கிரஸ் தலைவர் ரங்கராஜன் அப்பகுதியில் பிளாஸ்டிக் கை சின்னங்களை மக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அவரை பிடித்து திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்