எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை.- 23 - நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த ஜனாதிபதி தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இவர் வரும் 25ம் தேதி பதவியயேற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி நேற்று அவர் விடைபெற்றுக்கொண்டார். நாட்டின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட்டணியில் இல்லாத முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் , ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, இடது கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா போட்டியிட்டார். இந்த தேர்தலில் 776 எம்.பி.க்களும் 4,120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர். ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 11 லட்சம். இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. அதாவது 8 லட்சம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்திலும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களிலும் நடந்த இந்த தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிறகு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையத்திற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று காலை தொடங்கியது. முதலில் பாராளுமன்ற வளாகத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மாநிலங்களின் சட்டமன்ற வளாகங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டிகள் பிரணாப் மற்றும் சங்மா ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டன. இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்ட ஓட்டு செல்லாது என்று ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின்படி பிரணாப் முகர்ஜிக்கு 527 எம்.பி.க்களும், சங்மாவுக்கு 206 எம்.பி.க்களின் ஓட்டுக்களும் கிடைத்தன. மாநிலவாரியாக பிரணாப் முகர்ஜிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் சங்மாவிற்கு கூடுதலாக ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் கர்நாடகத்திலும் ஜார்கண்ட்டிலும் சில எம்.எல்.ஏ.க்கள் பிரணாப்பிற்கு வாக்களித்துவிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில் பிரணாப் முகர்ஜிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜிக்கு 7 லட்சத்து 13 ஆயிரத்து 763 வாக்குகள் கிடைத்துள்ளன. சங்மாவுக்கு 3 லட்சத்து 15 ஆயிரத்து 987 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து முகர்ஜி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி அறிவித்தார்.
இதை அடுத்து வருகிற 25 ம் தேதி நாட்டின் 14 வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டிலுக்கு வழி அனுப்பும் விழாவும் நடைபெற உள்ளது. பிரணாப்பின் வெற்றியை தொடர்ந்து டெல்லி மாநகரம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜிக்கு தற்போது 76 வயது ஆகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்த பிரணாப் மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜிக்கு அம்மாநில மக்கள் வாழ்த்த தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படடது இதுவே முதல் முறையாகும்.
பிரணாப் முகர்ஜிக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.