முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

அகமதாபாத், ஆக.8 - புனே குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.  ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு படையினர் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் முக்கிய இடங்கள், குறிப்பாக தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ள இடங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்துக்குள் நுழைய கூடிய, வெளியேறக் கூடிய அனைத்து வாகனங்களும் கடும் சோதனை செய்யப்படுகின்றன. குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்