எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, ஆக.- 13 - மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை நோனாங்குப்பம் பாலத்தில் நேற்று முன்தினம்(10-ந் தேதி) போலீஸ் பாதுகாப்பில் வேனில் கொண்டு செல்லப்பட்ட கைதி ஜெகனை ஒரு கும்பல் திட்டமிட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. புதுவை மாநில வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை. இதனால் புதுவை மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு இத்தகைய சம்பவங்கள் தொடர்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் பல பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, பெண்களிடம் நகை பறிப்பது, வீடுகள் அபகரிப்பு போன்ற சம்பவங்கள் சர்வசாதரணமாக நடந்து வருகின்றது. புதுவையை ரவுடிகள் ராஜ்யமாக மாறி வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை எதிர்கட்சிகள் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இ ந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ரவுடிகளை ஒடுக்குவதற்கு கொண்டு வரப்பட்ட குண்டர் சட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் 24 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்த அனுமதி கோட்டு கோப்பை முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பினார்கள். இந்த பட்டியலில் இருக்கும் ரவுடிகளில் பாதி பேர் ரங்கசாமி தொகுதியை சேர்ந்தவர்கள். எனவே முதல்வர் ரங்கசாமி அதற்கு அனுமதி அளிக்காமல் கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். இதனால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிசில்குமார் ஷிண்டேவை சந்தித்து பேசினேன். அப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், மக்கள் பாதுகாப்போடு இல்லை என்று கூறியதுடன் மத்திய அரசு புதுவை மாநிலத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக புதுவையிடம் அறிக்கை கேட்டு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். கைதி ஜெகனை அழைத்து சென்ற போது போலீசாரிடம் ரிவால்வர் துப்பாக்கி இருந்தும் அதை ஏன் படுத்தவில்லை? இதில் பல மர்மங்கள் உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஜகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடிக்கே இந்த நிலை என்றால்? சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்? சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரங்கசாமியின் ஆட்சியில் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதாரா முன்னேற்றம், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் குறைந்து விட்டது.
மாநில வளர்ச்சியே பின்தங்கி விட்டது. மக்களின் வாக்குகளை பெற்ற ரங்கசாமி தன்னை நிரந்தர முதல்வராக நினைத்துக் கொண்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தவறாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். கைதி கொலை குறித்து நீதி விசாரணை கோரி கவர்னரை சந்தித்து வலியுறுத்துறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
03 Jul 2025புதுடெல்லி, டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசினார்.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 82 பேர் பலி
03 Jul 2025ஜெருசலேம், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம