முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., பிரதமர் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. 22 - பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஸ்ரப் அந்நாட்டு ஐகோர்ட்டில் ஆஜராக தேவையில்லை என்று சட்ட நிபுணர்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் தெரிவித்துள்ளனர். 

அதிபர் ஆஷிப் அலி ஜர்தாரியின் ஊழல் வழக்கை மீண்டும் தொடங்க பிரதமருக்கு பாகிஸ்தான் ஐகோர்ட் அறிவுறுத்தி இருந்தது. வழக்கை தொடங்காததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27 ம் தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அரசியல் சாசனப்படி அஸ்ரப் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை என்று அட்டர்னி ஜெனரல் காதிர் தெரிவித்ததாக தி நியூஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 248 ன் கீழ் பிரதமருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அஸ்ரப் கோர்ட்டுக்கு செல்ல வேண்டாம் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அஸ்ரப் ஐகோர்ட்டில் ஆஜராக மாட்டார் எனத் தெரிகிறது. முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் கிலானி பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்