முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ராணுவ தாக்குதல்: 28 பயங்கரவாதிகள் கைது

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. - 27 - ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  மலைப் பிரதேசமான பஜவுரை அடுத்த சலர்ஜாய் பகுதியில் ராணுவமும், அரசுக்கு ஆதரவான லஸ்கர் அமைப்பும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானின் பட்வார் கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவினர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.  15 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஸ்கர் அமைப்பை சேர்ந்த 2 பேரும் ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தனர். இப்பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் பல்வேறு மறைவிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் குண்டுவீசி அழிக்கப்பட்டன. இந்த கிராமத்தில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆப்கன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவம் பதில் தாக்குதல் நடத்திய போதும் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்