எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.- 6 - சினிமா காமெடியன் வடிவேலு, நடிகை குஷ்புவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி தேர்தல் களம் காணும் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலையை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க.வின் கொள்கைகள் பாரம்பரியத்தையே கருணாநிதி குழி தோண்டி புதைத்து விட்டார் என தி.மு.க.வின் முன்னோடிகள் புலம்புகின்றனர். றகாங்கிரசுக்கு எதிராக தி.மு.க.வை தொடங்கினார் அண்ணா. தி.மு.கவுக்கென புரட்சிகரமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அண்ணா உருவாக்கினார். சிறந்த பேச்சாளர்கள், நேர்மையான சிந்தனையாளர்கள், தியாகசீலர்களின் உழைப்பால் உயர்ந்தது தி.மு.க. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக தி.மு.க.விற்கு கிடைத்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழக சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் இன்று வரை பிரிக்க முடியாத மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். இறந்து 24 ஆண்டுகளாகியும் அரசியல் சினிமாவில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காதவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்றளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார். எம்.ஜி.ஆரின் செல்வாக்கை , வளர்ச்சியை பொறுக்காத கருணாநிதி 1972 ல் எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து நீக்கினார். அதன் பின் விஸ்வரூபம் எடுத்த எம்.ஜி.ஆர் இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போதைய அரசியல் தலைவர்களான அண்ணா, ஈ.வெ. சம்பத், சத்யவாணி முத்து, மதியழகன், என்.வி. நடராஜன், சுப்பிரமணியன், பக்தவச்சலம், முத்துராமலிங் தேவர், மொரார்ஜி தேசாய், கக்கன், கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் ஆகிய மாபெரும் மனிதர்களுடன் அரசியல் பயணம் செய்தவர் கருணாநிதி. 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற கருணாநிதி 19 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து மிகப் பெரிய செல்வந்தரானார்.
சர்க்காரியா கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி. தற்போது மத்திய அரசில் தனது மகன், பேரன், உறவினர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை போராடி பெற்றவர். தொழில்நுட்ப ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர் ராசா, ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தில் கருணாநிதி டி.வியை தொடங்கி விட்டார். தானும் தனது குடும்பத்தினரும் மட்டுமே லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பாதித்து உலக கோடீஸ்வரர் வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் இடம் பிடித்து விட்டனர். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 6 வது முறையாக முதல்வராகி தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை மீண்டும் கொள்ளையடித்து திட்டம் வகுத்து செயல்படுகிறார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் செய்த தில்லுமுல்லு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், எதிர்க்கட்சியினரின் பூத் ஏஜண்டுகளை விலைக்கு வாங்குதல், பூத்களில் அதிகாரிகளை மிரட்டியோ, அல்லது அவர்களை விலைக்கு வாங்கியோ கள்ள ஓட்டுக்கள் போடுவது தேர்தலன்று வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைந்ததை போல் தற்போதைய தேர்தலிலும் வெற்றியடையலாம் என கனவு கண்டார். ஆனால் தேர்தல் கமிஷனோ கருணாநிதியின் ஆசை கனவில் மண்ணைப் போடுவது போன்று நேர்மையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. இதனால் தி.மு.க.வின் திட்டங்கள் ஈடுபடவில்லை. கருணாநிதியின் மகன் கேபினட் அரிதாரம் பூசியுள்ள அழகிரி தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி அவரது கைவாகனங்களுடன் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
அவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் முந்தைய தேர்தல்களை போன்று வெளிப்படையாக மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறுகிறார்கள். ஒரு சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.கவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணங்களையும் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல தி.மு.க.வினர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதுரை மேற்கு தொகுதியில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாலும் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் தொடரும் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு, மணல், கிரானைட் கொள்ளை, தி.மு.க. அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள மவுன புரட்சி அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்து அக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த கருணாநிதியும், அவரது மகன்களும் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எதையாவது செய்து தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலுவை தி.மு.க. விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறக்கி விட்டுள்ளனர். நடிகை குஷ்புவும் பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் ஏற்கனவே பிரச்சினை உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை நாகரீகமற்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வடிவேலு திட்டி வருகிறார்.
இதனால் அவரது பேச்சை கேட்க கூடும் தி.மு.க கூட்டணியினரும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் முகம் சுழிக்கின்றனர். தன்னிகரில்லா தலைவர்களுடன் அரசியல் நடத்திய கருணாநிதி இந்த தேர்தலில் தரம் தாழ்ந்து போய் நடிகர் வடிவேலு, குஷ்பு ஆகியோரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் கொதிப்பில் உள்ள தமிழக மக்கள் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மரண அடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என்பதை அறியாத கருணாநிதி இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறார் என தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே வெளிப்படையாக புலம்புகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.