எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.- 6 - சினிமா காமெடியன் வடிவேலு, நடிகை குஷ்புவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி தேர்தல் களம் காணும் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலையை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க.வின் கொள்கைகள் பாரம்பரியத்தையே கருணாநிதி குழி தோண்டி புதைத்து விட்டார் என தி.மு.க.வின் முன்னோடிகள் புலம்புகின்றனர். றகாங்கிரசுக்கு எதிராக தி.மு.க.வை தொடங்கினார் அண்ணா. தி.மு.கவுக்கென புரட்சிகரமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அண்ணா உருவாக்கினார். சிறந்த பேச்சாளர்கள், நேர்மையான சிந்தனையாளர்கள், தியாகசீலர்களின் உழைப்பால் உயர்ந்தது தி.மு.க. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக தி.மு.க.விற்கு கிடைத்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழக சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் இன்று வரை பிரிக்க முடியாத மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். இறந்து 24 ஆண்டுகளாகியும் அரசியல் சினிமாவில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காதவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்றளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார். எம்.ஜி.ஆரின் செல்வாக்கை , வளர்ச்சியை பொறுக்காத கருணாநிதி 1972 ல் எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து நீக்கினார். அதன் பின் விஸ்வரூபம் எடுத்த எம்.ஜி.ஆர் இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போதைய அரசியல் தலைவர்களான அண்ணா, ஈ.வெ. சம்பத், சத்யவாணி முத்து, மதியழகன், என்.வி. நடராஜன், சுப்பிரமணியன், பக்தவச்சலம், முத்துராமலிங் தேவர், மொரார்ஜி தேசாய், கக்கன், கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் ஆகிய மாபெரும் மனிதர்களுடன் அரசியல் பயணம் செய்தவர் கருணாநிதி. 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற கருணாநிதி 19 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து மிகப் பெரிய செல்வந்தரானார்.
சர்க்காரியா கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி. தற்போது மத்திய அரசில் தனது மகன், பேரன், உறவினர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை போராடி பெற்றவர். தொழில்நுட்ப ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர் ராசா, ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தில் கருணாநிதி டி.வியை தொடங்கி விட்டார். தானும் தனது குடும்பத்தினரும் மட்டுமே லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பாதித்து உலக கோடீஸ்வரர் வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் இடம் பிடித்து விட்டனர். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 6 வது முறையாக முதல்வராகி தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை மீண்டும் கொள்ளையடித்து திட்டம் வகுத்து செயல்படுகிறார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் செய்த தில்லுமுல்லு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், எதிர்க்கட்சியினரின் பூத் ஏஜண்டுகளை விலைக்கு வாங்குதல், பூத்களில் அதிகாரிகளை மிரட்டியோ, அல்லது அவர்களை விலைக்கு வாங்கியோ கள்ள ஓட்டுக்கள் போடுவது தேர்தலன்று வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைந்ததை போல் தற்போதைய தேர்தலிலும் வெற்றியடையலாம் என கனவு கண்டார். ஆனால் தேர்தல் கமிஷனோ கருணாநிதியின் ஆசை கனவில் மண்ணைப் போடுவது போன்று நேர்மையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. இதனால் தி.மு.க.வின் திட்டங்கள் ஈடுபடவில்லை. கருணாநிதியின் மகன் கேபினட் அரிதாரம் பூசியுள்ள அழகிரி தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி அவரது கைவாகனங்களுடன் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
அவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் முந்தைய தேர்தல்களை போன்று வெளிப்படையாக மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறுகிறார்கள். ஒரு சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.கவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணங்களையும் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல தி.மு.க.வினர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதுரை மேற்கு தொகுதியில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாலும் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் தொடரும் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு, மணல், கிரானைட் கொள்ளை, தி.மு.க. அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள மவுன புரட்சி அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்து அக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த கருணாநிதியும், அவரது மகன்களும் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எதையாவது செய்து தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலுவை தி.மு.க. விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறக்கி விட்டுள்ளனர். நடிகை குஷ்புவும் பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் ஏற்கனவே பிரச்சினை உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை நாகரீகமற்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வடிவேலு திட்டி வருகிறார்.
இதனால் அவரது பேச்சை கேட்க கூடும் தி.மு.க கூட்டணியினரும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் முகம் சுழிக்கின்றனர். தன்னிகரில்லா தலைவர்களுடன் அரசியல் நடத்திய கருணாநிதி இந்த தேர்தலில் தரம் தாழ்ந்து போய் நடிகர் வடிவேலு, குஷ்பு ஆகியோரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் கொதிப்பில் உள்ள தமிழக மக்கள் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மரண அடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என்பதை அறியாத கருணாநிதி இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறார் என தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே வெளிப்படையாக புலம்புகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச


