முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிக்காலத்தில் காலமான சென்னை தலைமைகாவலர் குடும்பத்திற்கு முதல்வர் நிதிஉதவி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 30 - பணிக்காலத்தில் காலமான சென்னை பெருநகரைச் சேர்ந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-சென்னை பெருநகர காவல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த எ.குருசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28.8.2012 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். காவல் துறை தலைமைக்  காவலர் குருசாமி அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக் குறைவால் காலமான எ.குருசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்