முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஒதுக்கீட்டுக்கு பிரதமர் பொறுப்பு என்றுகூறுவது நியாயமற்றது

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

பெங்களூர், செப். - 10 - நிலக்கரி சுரங்க உரிம ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது என்று மத்திய மின்சார துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். நிலக்கரி சுரங்க உரிம ஒதுக்கீடு பெறுவதற்கு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆலோசனை குழுவால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் சுரங்க நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெற்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆய்வு குழுவிலே சுரங்க ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் சுரங்க ஒதுக்கீட்டுக்கு பிரதமர்தான் பொறுப்பு என்று கூறுவது முறையாகாது என்று மேலும் தெரிவித்தார் வீரப்ப மொய்லி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்