எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.- 7 - ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹஸரே நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். நாட்டில் ஊழல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதோடு ஏழைகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். இதை தடுக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல சமூக சேவகர் அண்ணா ஹஸரே,பிரதமர் மன்மோகன் சிங்கை பல முறை சந்தித்து வலியுறுத்தினார். இதனையொட்டி லோக்பால் மசோதாவுக்கான விதிமுறைகளை உருவாக்க மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி அமைக்கப்பட்டதை வரவேற்ற ஹஸரே, தலைவராக சரத்பவாரை நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சரத்பவார் அந்த மாநிலத்தில் ஏகப்பட்ட நிலத்தை சுற்றிவளைத்துப்போட்டுள்ளார். அப்படிப்பட்டவரை கமிட்டி தலைவராக நியமிக்கக்கூடாது என்று ஹஸரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மேலும் லோக்பால் மசோதா நிறைவேற்றுதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும் நேற்றுமுதல் டெல்லியில் உள்ள சந்தர்மந்தர் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக அவர் நேற்று காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ஊர்வலமாக வந்தார். நேற்று இரண்டாவது நாளாக ஹஸரே உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அதேசமயத்தில் தனது உண்ணாவிரதத்திற்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஹஸரே தெரிவித்துள்ளார். என்னுடைய போராட்டம் தேவையற்றது, அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் கூறியிருப்பதற்கும் ஹஸரே கண்டனம் தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதோடு கமிட்டியில் மக்கள் பிரதிநிதிகளை நியமித்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன். இல்லாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஹஸரே உறுதிபடக்கூறினார். ஹஸரே உண்ணாவிரதத்திற்கு சுவாமி அக்னிவேஷ், கிரன்பேடி, சந்தீப் பாண்டே ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026


