முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்களை மீட்டு நல்லாட்சி தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும் நடிகர் ராமராஜன் அறிக்கை

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 7 - ராமருக்கு அணில் உதவியதுபோல, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிமலர மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க ஆசைப்படுகிறேன் என்றும், அவதியில் இருக்கும் தமிழக மக்களை மீட்டு நல்லாட்சி தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும் என்றும்  நடிகர் ராமராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மீண்டும் அமைதி பூங்காவான ஆட்சியை நிலை நிறுத்திட தமிழக வாக்காளர்களை சந்தித்து நல்ல பல வாக்குறுதிகளை தந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை கொண்டு வர அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரவு, பகலாக பாடுபட்டு வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த காலகட்டத்தில்,  ராமபிரான் சேது பாலம் அமைத்தபோது அதன்மீது கொண்ட பக்தியின் காரணமாக அணில் பிள்ளையும் ஆர்வத்தோடு ஓடி வந்து தன்னால் இயன்றதை செய்ததுபோல, அ.தி.மு.க. ஆட்சிமலர தமிழக மக்களை நேரில் சந்தித்து நானும் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததால், அது முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பாதிக்கப்பட்ட நான் உரிய நேரத்தில் ஜெயலலிதாவால் அளிக்கப்பட்ட மருத்துவ உதவியால் இன்று மறுபிறவி எடுத்து குணமாகிவரும் நிலையில் இருக்கிறேன். தேர்தல் களத்தில் தற்சமயம் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை.

கார் விபத்தினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். இருந்தாலும் என் மனதில் உள்ள கருத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்புவதால், இந்த வேண்டுகோள் அறிக்கையை வெளியிடுகிறேன்.

கடும் விலைவாசி ஏற்றத்தாலும், அடிக்கடி ஏற்படும் காலவரையற்ற மின்வெட்டாலும், சட்டம்-ஒழுங்கு தறிக்கெட்டு போனதாலும் இன்று மக்கள் அவதியுற்று வருகிறார்கள். இந்த அவதியில் இருந்து  தமிழக மக்களை மீட்டு, அவர்களுக்கு  நல்லாட்சியை தர ஜெயலலிதா ஒருவரால் மட்டுமே முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்