எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,செப்.22 - டீசல் விலை உயர்வு,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டனர். இந்த 6 அமைச்சர்களும் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் சந்தித்து கொடுத்தனர்.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் என்று கூறிக்கொண்டு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 ஐ மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மட்டுமல்லாது மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தி.மு.க.கூட எதிர்ப்பு தெரிவித்தது. டீசல் விலை உயர்த்தப்பட்ட ஒருசில நாட்களில் உள்நாட்டு விமானபோக்குவரத்துத்துறை, மின்சார துறை, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது. இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டணியில் இடம் பெற்றுள்ள போதிலும் டீசல் விலை உயர்த்தப்பட்டது, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்தது தொடர்பாக என்னிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். அதோடுமட்டுமல்லாது டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 1 முதல் 2 வரை குறைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வருடத்திற்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதை 3 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சரவையில் இருந்து எனது கட்சி அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் ஆதரவை வாபஸ் வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதனையொட்டி மத்திய அரசு ஆட்டம் காணும் நிலைக்கு வந்தது. மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்த காங்கிரஸ் சார்பாக முயற்சிகள் நடந்தது. முயற்சி வெற்றிபெறவில்லை. மம்தா விதித்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசும் தனது நிலையில் உறுதியாக இருந்தது. இதனால் அமைச்சரவையில் இருந்து மம்தா கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்களும் நேற்று ராஜினாமா செய்துவிட்டனர். டெல்லியில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அலுவலக வீட்டிற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முகுல்ராய், சுதீப் பந்த்யோபாத்யாய், சுல்தான் அகமத், செளகதா ராய், சிசிர் ஆதிகரே, சி.எம். சத்வா ஆகிய 6 அமைச்சர்களும் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நம்பர் 7 என்ற நம்பரையுடைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலக வீட்டிற்கு சென்று அவரிடம் ராஜினாமா கடிதத்தை நேரடியாக கொடுத்தனர். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் பெறும்போது நீங்கள் ராஜினாமா செய்வது எனக்கு ரொம்ப கவலை அளிக்கிறது என்று கூறியதாக பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பந்த்யோபாத்யாய் கூறினார். இந்த 6 அமைச்சர்களில் முகல்ராய் மட்டும் கேபினட் அமைச்சர். இவர் கடந்த மார்ச் மாதம்தான் ரயில்வே கேபினட் அமைச்சரானார். மற்ற 5 அமைச்சர்களில் பந்த்யோபாத்யாய் சுகாதாரத்துறை இணைஅமைச்சராகவும், அகமத், சுற்றுலாத்துறை இணைஅமைச்சராகவும், செளகதா ராய், நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், ஆதிகரி,கிராமப்புற வளர்ச்சித்துறை இணைஅமைச்சராகவும், சி.எம்.ஜத்வா செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் இருந்தனர். மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளவர்களின் கட்சியான திரிணாமூல் காங்கிரசில் 19 எம்.பி.க்கள் உள்ளனர். அதேசமயத்தில் 22 எம்.பி.க்கள் கொண்ட சமாஜ்வாடி கட்சியும் 21 எம்.பி.க்களை கொண்ட பகுஜன்சமாஜ் கட்சியும் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளன. அதனால் 19 எம்.பி.க்களை கொண்ட திரிணாமூல் காங்கிரசானது மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றாலும் ஆட்சி கவிழும் அபாயம் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி