முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் ம.ம.மு.க.வினர் 252 பேர் கைது - தடியடி

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,செப்.22 - நெல்லையில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் முயன்றதால் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சேதமடைந்தன.

மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி அமெரிக்காவில் வெளியான குறும்படத்தை மத்திய அரசு தடைசெய்ய வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். இதனையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர் மணிவண்ணன் (சட்டம் - ஒழுங்கு) தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த கழகத்தின் மாநில தலைவர் பாளை ரடிபீக் தலைமையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று மாலை திரண்டனர். அப்போது அவர்கள் போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்று ரயில்நிலைய பொருட்களை சேதம் உண்டு பண்ண முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென்று போலீசாரிடம் தகராறு செய்து போலீசார்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் நாலாபுறமும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இந்த போராட்டத்தில் ்டுபட்ட 18 பெண்கள் உள்பட 252 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் நெல்லை சந்திப்பு பேருந்துகாப்பு பணியில் ்டுபட்டிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தி அங்கு நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  போலீசார் ஜார்ஜ், பிலிப், பாலா, அருண், அகம்மதுஅலி,பேச்சிமுத்து உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

10க்கும் மேற்பட்ட பேருந்துகளும் சேதமடைந்தன. தாக்குதலில் காயம் அடைந்த போலீசார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிரச்சனை மேலும் ஏற்படாமல் இருக்க நெல்லை மாநகர பகுதிகள் மற்றும் மேலப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போராட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்த முயன்றனர். இதனால் கலைந்து செல்ல எவ்வளவோ கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாரை தாக்க முயன்றனர். இதனைத்தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்தவே லேசாக தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ்டுபட்ட 18 பெண்கள்  உள்பட 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. மேலும் பிரச்சனை ஏதுவும் ஏற்படாமல் இருக்க நெல்லை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான மேலப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago