முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மேடையில் பா.ஜ. தலைவர் முண்டே - சுரேஷ் கல்மாடி

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புனே,செப்.23 - புனே நகரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரதிய ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேவும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடியும் கலந்துகொண்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மும்பைக்கு அடுத்தபடியாக திகழும் புனே நகரிலும் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனே நகரில் விநாயகர் சதுர்த்தி 10 நாள் கொண்டாடப்படும் 25-வது ஆண்டு விழாவை பாரதிய  ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டே தொடங்கிவைத்தார். இந்த விழாவில் ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தியதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடியும் கலந்துகொண்டார். அதோடுமட்டுமல்லாது விழாவை தொடங்கிவைத்து பேசிய முண்டே, சுரேஷ் கல்மாடியை பாராட்டியும் பேசினார். இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு சுரேஷ் கல்மாடி தாவலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் கல்மாடி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பாரதிய ஜனதா சேர்த்துக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சாகன் புஜ்பால் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. ஒலிம்பிக் வீரர்கள் சுஷில்குமார், ககன் நராங் ஆகியோருக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்