முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தேரோட்டம் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, செப். - 26 - திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதியன்று துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை 22ம் தேதி நடைபெற்றது. இதில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7 வது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஏழுமலையான் சூரியபிரபை வாகனத்தில் பவனி வந்தார். அன்றிரவே சந்திரபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. தங்க தேரில் அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மாடவீதிகளில் பவனி வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்