முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பாதுகாப்பு: இந்தியா வருகிறது இலங்கை குழு

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, அக். 6 - கூடங்குளம் அணு உலை விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் விவாதிக்க இலங்கையின் அதிகாரப்பூர்வ குழு வரும் 12 ம் தேதி இந்தியாவுக்கு செல்லும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

கூடங்குளம் அணு உலையினால் பாதிப்பு ஏற்பட்டால் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இந்தியாதான். கூடங்குளம் அணு உலையில் அணுக் கசிவு ஏற்பட்டால் மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளும் பாதிக்கும். இதனால் சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையின் படி இந்தியா செயல்பட வேண்டும்.

இது தொடர்பாக விவாதிக்க 6 பேர் அடங்கிய குழு ஒன்று இந்தியா செல்கிறது. கூடங்குளம் அணு உலையின் பாதிப்பிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற தேவையான உதவிகளை இந்தியா வழங்க இந்த பயணத்தின் போது வலியுறுத்தப்படும். இது தொடர்பான ஒப்பந்தத்துக்கான மாதிரியை ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்