எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.14 - தமிழகம் மற்றும் புதுவையில் 4 அடுக்கு பாதுகாப்புடன் தேர்தல் நேற்று (ஏப்.13) விறுவிறுப்புடனும், அமைதியாகவும் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக நடந்தது. ஓட்டுப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஓட்டுப்பதிவுக்காக 66 ஆயிரத்து 799 மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.அவற்றோடு 62 ஆயிரத்து 461 மைய கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய, அதிகாலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்திப் பார்க்கப்பட்டது. காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. 4.71 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.க
ாலை 8 மணிக்குத்தான் ஓட்டுப்பதிவு தொடங்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த போதிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டனர். சில வாக்குச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் 7.30 மணிக்கே வரிசையாக நின்று இருந்தனர். 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கிய சமயத்தில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் உக்கிரம் அதிகமாகி விடும் என்ற காரணத்தால் முதியவர்கள் பலர் காலையிலேயே வந்து தங்கள் வாக்களிக்கும் கடமையை செய்து முடித்தனர். முதன் முதலாக வாக்களிக்கும் சுமார் 80 லட்சம் இளைஞர்களும் வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 9 மணிக்குள் அதாவது முதல் ஒரு மணி நேரத்துக்குள் 10 சதவீதம் பேர் தங்களது வாக்கை பதிவு செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 11.30 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததை காண முடிந்தது. 11 மணி நிலவரப்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் சுமார் 32 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மாற்றுத் திறனாளிகள் சாய்வுத் தாங்களை பயன்படுத்தி சிக்கலின்றி வாக்களித்தனர். அது போல பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையை பயன்படுத்தி எளிதாக ஓட்டு போட்டனர். வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதிரடிப்படை மற்றும் மாநில காவல்துறை ஆகிய 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் எங்கும் சர்ச்சை ஏற்படவில்லை. ஓட்டுப்பதிவு மிக, மிக அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் பழுதாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்தகைய வாக்குச் சாவடிகளில் ஓரிரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு தொடங்கியது. மற்றபடி ஓட்டுப்பதிவில் எந்தவித சிறு சலசலப்பும் உண்டாகவில்லை.தேர்தல் அதிகாரிகள் சுமூகமான ஓட்டுப்பதிவை நடத்தி பாராட்டுதல்களை பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 30 தொகுதிகளுக்கும் 851 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர். நகர பகுதி மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 151 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் புதுவையில் மட்டும் 68 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், கூடுதலாக போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று சோதனையும் நடத்தினர். பறக்கும் படையினர் அந்தந்த பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறதா? வாக்காளர்களிடம் பிரசாரம் நடக்கிறதா? என தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு பிறகு வந்த வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பிறகு அந்த எந்திரங்கள் அனைத்தும் கார்களில் ஏற்றப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக தேர்தல் அமைதியாக நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளின் ஓட்டுக்கள் 91 இடங்களில் எண்ணப்படும். சென்னையில் 16 தொகுதிகளின் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும். மே 13ந்தி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.


