எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஏப்.14 - சேலம் அருகே வாக்குச்சாவடி அருகில் நடந்த மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததில் அ.தி.மு.க.எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது பிணத்துடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அந்த வழியே வந்த போலீஸ் வாகத்தை மறித்து சூறையாடினர்.
சேலம் சிவதாபுரம் பகுதியில் குடும்பியான் தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி(56). இவர் 22 வது வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகியாக இருந்தார். இவரது மனைவி அம்மணி(45). இவர்களுக்கு இந்திரன்(13) என்ற மகனும், ஹேமலதா(12). என்ற மகளும் உள்ளனர்.சின்னதம்பியின் வீட்டருகில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வாக்குசாவடி அமைந்துள்ளது.நேற்று மாலை 4.30 மணியளவில் இறுதிகட்ட வாக்குபதிவின்போது முறைகேடு செய்ய தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்கு முன்பு கூட்டமாக கூட தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சின்னதம்பி மற்றும் அ.தி.மு.க.வினரும் அங்கு கூடினர். அப்போது இருதரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது 2 தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினர். அதற்கு அ.தி.மு.க.வினர் தி.மு.க.வினரை போக சொல்லுமாறு தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சின்னதம்பி மற்றும் அ.தி.மு.க.வினரை அடித்துள்ளனர். அப்போது சின்னதம்பியை வயிற்றிலும், நெஞ்சிலும் லத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. வலியோடு வீட்டு வாசலில் போட்டிருந்த கட்டிலில் படுத்தவர் இறந்து போனார்.
இதையறிந்த சின்னதம்பியின் குடும்பத்தாரும், அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சின்னதம்பி உடலை கட்டிலோடு தூக்கிக் கொண்டு சிவதாபுரம் மெயின்ரோட்டில் சித்தர்கோவில் செல்லும் சாலையில் கிருஷ்ணப்பா தியேட்டர் அருகில் சாலையில் வைத்துவிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு டாடா சுமோ வாகனத்தில் விரைந்து வந்தனர். இதையறிந்த பொதுமக்கள் வேனை மறித்து தாக்கினர். உடனே இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வாகனத்தை விட்டு இறங்கி தப்பியோடினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சேலம் எம்.பி.செம்மலை பொதுமக்களை அமைதி படுத்தி வன்முறையில் ஈடுபடாமல் தடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் அங்கு வந்து டூ வீலர் மூலம் தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தை அறிந்த அ.தி.மு.க.வேட்பாளர்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாஜலம், எஸ்.கே.செல்வம், அ.தி.மு.க.மேற்கு தொகுதி செயலாளர் கே.சி.செல்வராஜ் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருள்புஷ்பராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலை தொடர்ந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வன், பயிற்சி டி.எஸ்.பி.அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் அவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுத்து, ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் சின்னதம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவதாபுரம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் விசாரணை நடத்த காலக்கெடு வேண்டாம்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
04 Jul 2025சென்னை : அ.தி.மு.க.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.