எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஏப்.14 - சேலம் அருகே வாக்குச்சாவடி அருகில் நடந்த மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததில் அ.தி.மு.க.எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது பிணத்துடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அந்த வழியே வந்த போலீஸ் வாகத்தை மறித்து சூறையாடினர்.
சேலம் சிவதாபுரம் பகுதியில் குடும்பியான் தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி(56). இவர் 22 வது வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகியாக இருந்தார். இவரது மனைவி அம்மணி(45). இவர்களுக்கு இந்திரன்(13) என்ற மகனும், ஹேமலதா(12). என்ற மகளும் உள்ளனர்.சின்னதம்பியின் வீட்டருகில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வாக்குசாவடி அமைந்துள்ளது.நேற்று மாலை 4.30 மணியளவில் இறுதிகட்ட வாக்குபதிவின்போது முறைகேடு செய்ய தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்கு முன்பு கூட்டமாக கூட தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சின்னதம்பி மற்றும் அ.தி.மு.க.வினரும் அங்கு கூடினர். அப்போது இருதரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது 2 தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினர். அதற்கு அ.தி.மு.க.வினர் தி.மு.க.வினரை போக சொல்லுமாறு தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சின்னதம்பி மற்றும் அ.தி.மு.க.வினரை அடித்துள்ளனர். அப்போது சின்னதம்பியை வயிற்றிலும், நெஞ்சிலும் லத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. வலியோடு வீட்டு வாசலில் போட்டிருந்த கட்டிலில் படுத்தவர் இறந்து போனார்.
இதையறிந்த சின்னதம்பியின் குடும்பத்தாரும், அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சின்னதம்பி உடலை கட்டிலோடு தூக்கிக் கொண்டு சிவதாபுரம் மெயின்ரோட்டில் சித்தர்கோவில் செல்லும் சாலையில் கிருஷ்ணப்பா தியேட்டர் அருகில் சாலையில் வைத்துவிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு டாடா சுமோ வாகனத்தில் விரைந்து வந்தனர். இதையறிந்த பொதுமக்கள் வேனை மறித்து தாக்கினர். உடனே இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வாகனத்தை விட்டு இறங்கி தப்பியோடினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சேலம் எம்.பி.செம்மலை பொதுமக்களை அமைதி படுத்தி வன்முறையில் ஈடுபடாமல் தடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் அங்கு வந்து டூ வீலர் மூலம் தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தை அறிந்த அ.தி.மு.க.வேட்பாளர்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாஜலம், எஸ்.கே.செல்வம், அ.தி.மு.க.மேற்கு தொகுதி செயலாளர் கே.சி.செல்வராஜ் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருள்புஷ்பராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலை தொடர்ந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வன், பயிற்சி டி.எஸ்.பி.அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் அவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுத்து, ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் சின்னதம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவதாபுரம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.


