முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதியிடம் எந்த பேரமும் பேசவில்லை: கமல்நாத்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 8  - அன்னிய முதலீடு தொடர்பான விவகாரத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் நடந்து கொண்ட விதம் நாட்டு மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் ஆதாயம் பெறுவதற்காகவே இந்த கட்சிகள் இப்படி இரட்டை வேடம் போடுவதாக மக்கள் கருதுகிறார்கள். இந்த விவகாரத்தில் திரைமறைவு பேரம் நடந்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது. 

இதை பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கமல்நாத் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிக்க நாங்கள் யாரிடமும் எந்த பேரமும் பேசவில்லை. ஆனால் நாங்கள் பேரம் பேசியதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. மாயாவதியை காங்கிரசுக்கு சாதகமாக சம்மதிக்க வைத்ததில் எந்த தந்திரமும் இல்லை. அவரை புரிந்து கொள்ள வைப்பது தேவையாக இருந்தது. அவர் சரியாக புரிந்து கொண்டார். 

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி பாராளுமன்றத்தில் விவாதிப்பதால் மட்டுமே முடிவை ஏற்படுத்தி விட முடியாது. அதை அமல்படுத்துவதா வேண்டாமா என்பதை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜ.க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது. இனி இதில் பேச ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்