எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - எட்டு அரசு போக்குவரத்து தலைமையகங்களும், 285 பணிமனைகள் 20 கோட்டங்கள் கணினி வழி மூலம் இணைக்கவும் இந்த ஆண்டு 3 ஆயிரம் பேருந்துகளை வாங்க ரூ.548 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பயணிகளுக்கு விரைவாக பயணச்சீட்டுகளை வழங்க அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் 43,987 கையடக்கக் கருவிகளைக் கொள்முதல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமானால், அனைத்து அடிப்படை வசதிகளோடு போக்குவரத்து வசதியும் சிறப்பாக அமைந்திடல் வேண்டும். பலவகை போக்குவரத்து வசதிகளில் சாலைப் போக்குவரத்து வசதி மிகவும் இன்றியமையாததாகும். மக்களை இணைக்கும் பாலமாக சாலைப் போக்குவரத்து செயல்படுகிறது. சாலைப் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்தால் தான் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் போக்குவரத்து வசதி அளிப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் 21,989 பேருந்துகளை இயக்கி வருகின்றன. நாளொன்றுக்கு 1.82 கோடி பயணிகள் இந்தப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். சென்னைப் பெருநகரப் பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு
47 லட்சத்திற்கும் மேல் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். எனவே, மக்களின் போக்குவரத்துத் தேவையை nullர்த்தி செய்வதற்கும், மக்களின் பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களுக்கு மாற்றாகவும், 3,000 புதிய பேருந்துகளை 434 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்குவதற்கும், மேலும் அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையிலுள்ள 1,432 பேருந்துகளை 97 கோடியே
58 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பதற்கும் சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த ஆண்டு, 548 கோடி ரூபாய் செலவில் 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இப்பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக கொள்முதல் செய்வதற்காக அரசு சார்பாக 150 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும், 150 கோடி ரூபாயை கடனாகவும் வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் துரிதமாக மக்களுக்கு சென்று அடைவதற்கு மின்ஆளுமை மற்றும் கணினிவழி சேவைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச் சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக, பயணிகள் எளிதாக பயணச் சீட்டினை பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களை பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறையினை எல்லா பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச் சீட்டு வழங்கிட இயலும், நடத்துனரின் பணியும் எளிதாகும். இதுமட்டுமன்றி, ஒவ்வொரு பேருந்துகளிலும் வழங்கப்பட்ட பயணச் சீட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும். மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றனவா போன்ற விவரங்கள் அனைத்தும் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மற்றும் உயர் அலுவலர்களால் உடனடியாக அறியப்படும்.
எனவே 8 போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த பேருந்துகளில் அதிநவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச் சீட்டுகளை வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் 43,987 கையடக்க கருவிகளை கொள்முதல் செய்வதற்கும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை 285 பணிமனைகள், 20 கோட்டங்கள்,
8 போக்குவரத்து தலைமையகங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தி அவற்றை சென்னையில் அமைய உள்ள மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் இணைய தளத்தின் மூலம் இணைக்கும் வசதியை ஏற்படுத்துவதற்கும், தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களின் பணிகள் மேம்பாடு அடைய வழிவகை செய்யும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.