முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பல்கலைக்கழக துணை பதிவாளர் மீது வழக்கு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 -​ தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக துணை பதிவாளர் ஜெயராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மகாலிங்கம். இவர் கடந்த 2009ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், தனக்கு சம்பள உயர்வு மற்றும் பென்சன் தொகை வழங்கியதில் அnullநீதி இழைக்கப்பட்டது. நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், துணை பதிவாளர் ஜெயராமன், உள்ளாட்சி தணிக்கை துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் மூலம் எனக்கு இந்த அநீnullதி நடந்தது. அவர்கள் இருவரும் உயர் சாதியை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு அடிப்படையில், கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நேற்றுமுன்தினம்    வழக்குப்பதிவு செய்தார். இந்த புகாரும், வழக்கும் நியாயமானது இல்லை என்றும், இது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது என்றும், சென்னை பல்கலைக்கழக பதிவாளரிடம் கேளுங்கள் என்றும் துணை பதிவாளர் ஜெயராமன், நிருபர்களிடம்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்