எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.28 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசின் நிதி நிலையினை உயர்த்திடும் முனைப்புடன், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் வேலூர் கோட்டங்களின் திறனாய்வினை தொடர்ந்து வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் அமைச்சர் பி.வி. ரமணா சென்னையில் உள்ள வணிகவரி கோட்ட அலுவலர்களின் பணித்திறனாய்வினை 27/12/2012 அன்ற சென்னையில் மேற்கொண்டார்.
சுனில் பாலிவால், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர், க. மணிவாசன், வணிகவரித்துறை ஆணையர் அவர்களுடன் துறையின் கூடுதல் ஆணையர்களும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். சென்னை கோட்டத்தின் செயலாக்கம் மற்றும் நிர்வாக பிரிவுகளின் இணை ஆணையர், துணை ஆணையர்கள, உதவி ஆணையர்கள், வணிகவரி அலுவலர்கள் மற்றும் துணை வணிகவரி அலுவலர்கள் ஆகியோரும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தினைப் பொறுத்தமட்டில் நவம்பர் 2012 வரையிலான விற்பனை வரி வருவாய் ரூ.31127.01 கோடிகள் என்பதையும், அது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.25055.89 கோடிகளாக இருந்ததையும் சுட்டிக் காட்டிய அமைச்சர் துறையின் வரி வருவாய் 24.23 விழுக்காடுகள் உயர்ந்துள்ளதெனத் தெரிவித்தார். சென்னையில் உள்ள ஐந்து வணிகவரி கோட்டங்களான சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), சென்னை (மையம்), சென்னை (கிழக்கு) மற்றும் பெருவணிகர்கள் வரி செலுத்தும் பிரிவு ஆகியவைகளைப் பொருத்தமட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 2011 வரை ரூ.19952.00 கோடிகளாக இருந்த வரி வருவாய் நடப்பாண்டில் நவம்பர் வரை ரூ.24176.00 கோடிகளாக உயர்ந்து 24 விழுக்காடுகள் வளர்ச்சி கண்டுள்ளதைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர் துறையின் அலுவலர்கள் பெரும் முனைப்புடன் செயலாற்றினால் மட்டுமே துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2012-13ம் ஆண்டிற்கான வருவாய் இலக்கினை முழுமையாக எய்த இயலும் என்பதனை வலியுறுத்தினார். மேலும், வணிகவரித்துறையின் மொத்த வருவாயில் 75 விழுக்காடுக்கு மேல் சென்னை கோட்டங்களிலிருந்து மட்டுமே வசூல் செய்யப்படுவதால், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலர்களும் சிறப்புடனும் அதிக சிரத்தையுடனும் செயல்பட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அடுத்ததாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அலுவலக கட்டிடங்களை பராமரிக்கவும் சென்னை செயலாக்க கோட்டங்களுக்குட்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் தணிக்கை மையங்களை அமைத்திட நிலம் வாங்கவும் நவீனமயமாக்கல் பணிகளை கருத்திற் கொண்டும் தமிழக முதல்வர் ரூ.4.60 கோடிகளை சென்னை கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதனை அமைச்சர் சுட்டிக் காட்டினார். இதன் விளைவாக திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவொற்றியூரில் உள்ள தணிக்கை சாவடிகளுக்கு இடம் வாங்குவதற்கும், கட்டிடங்களை அமைத்திடவும் ரூ.3.12 கோடிகள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 0.41 கோடிகள் செலவில் புழல் தணிக்கை சாவடியை மேம்படுத்தவும், ரூ.0.48 கோடிகள் செலவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே தணிக்கை மையம், ராயபுரம் சரக்கு மையம், எழும்ர் சரக்கு மையம் மற்றும் சூளையில் உள்ள ரயில்வே சால்ட் கோட்ரஸ் தணிக்கை மையங்களை மேம்படுத்திடவும் நவீனமயமாக்கிடவும் நிதி ஒதுக்கி உள்ளதையும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க புதிய கட்டிடங்களை அமைக்கும் பொழுது அவைகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் உபகரணங்களை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் அமைச்சர் தெரிவித்தார்.
இவையன்றியும் துணை வணிகவரி அலுவலர் பணிநிலையில் 117 இடங்களையும், உதவியாளர்கள் பணிநிலையில் 100 இடங்களையும் உடனடியாக நிரப்பிட முதல்வர் ஆணையிட்டுள்ளதனைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட நபர்களைக் கொண்டு இவற்றுள் சென்னையை பொறுத்தமட்டில் 27 துணை வணிகவரி அலுவலர்கள், 35 உதவியாளர்கள், 30 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 12 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுள்ளதெனவும் பெருமையுடன் தெரிவித்தார்.
செயலாக்கப்புரிவு அலுவலர்கள் திறம்பட செயலாற்றினால் வரி ஏய்ப்பு பெருமளவில் குறைந்து வரி வருவாய் உயரும் என்பதைத் தெளிவுற எடுத்துரைத்த அமைச்சர் சோதனைச்சாவடி அலுவலர்கள் மற்றும் சுழல் குழு அலுவலர்கள் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் மற்றும் தமிழகத்திற்குள் கொணரப்படும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி வரி ஏய்பபைத் தடுத்திட அறிவுரைகள் வழங்கினார். மேலும், அமைச்சர் வரி ஏய்ப்புக்குட்பட்ட பொருட்களின் பரிமாற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், அதிக அளவில் வணிகர்கள் வரி செலுத்துதலை உறுதி செய்தலும், வரி நிலுவைகளை விரைந்து வசூலித்தலும் துறை அலுவலர்களது தலையாய பணி என்பதனையும் மேற்படி பணியினை குறிப்பிட்ட கால திட்டத்திற்குள் செயல்படுத்துதல் அவசியமென அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டத்தின் நிறைவாக அமைச்சர் வணிகவரித்துறை அலுவலர்கள் தீவிரமான முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் பாடுபட்டால் மட்டுமே துறையின் முழுமையான செயல்பாட்டினை நிலைநிறுத்திடவும், தமக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை எய்திடவும் இயலும் என்றும் இதன் மூலமே அரசின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திட இயலும் என்பதனையும் வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி