முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் புதிய தலைமைச் செயலாளர்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள ஷீலா பாலகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலாளராக உள்ள தேவேந்திரநாத் சாரங்கி, இன்று ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீnullர் வழங்கல் துறையின் செயலாளராக உள்ள ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று தலைமைச் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். 

தமிழக அரசில் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 2002-​ம் ஆண்டு டிசம்பரில் முதல் பெண் தலைமைச் செயலாளராக லட்சுமி பிரானேஷ் நியமிக்கப்பட்டார். அதன் பின், திமுக ஆட்சியில் 2010-​ம் ஆண்டு மாலதி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த இருவரைத் தொடர்ந்து, மூன்றாவது பெண் தலைமைச் செயலாளர் என்ற பெருமையை ஷீலா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்