முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை - காஞ்சிபுரத்தில் மழை

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 31 -​வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமதாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு வரை பரவலாக மழை பெய்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அதேபோல் காஞ்சிபுரம் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்