முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர பகுதியில் மீன்பிடித்த 21 இலங்கை மீனவர்கள் கைது

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 20 - ஆந்திர மாநில கடல் பகுதியில் மீன் பிடித்ததாக 21 இலங்கை மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 4 படகுகளில் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த 21 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்த அவ்களை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 படகுகள், 120 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் அவர்கள் சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துறைமுகம் போலீசார் 21 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் 21 பேரையும் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை பிப்ரவரி 1 ம் தேதி வவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 21 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்