முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்ததில் 17 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஈடாநகர், ஏப்.20 - அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தீப்பிடித்து கிடு கிடு பள்ளத்தில் நொறுங்கி விழுந்ததில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் என்ற சுற்றுலா தலத்திற்கு 18 பயணிகள் மற்றும் 5 விமான சிப்பந்திகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் தவாங் என்ற மலைப்பகுதி நகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கிய போது அது திடீர் என்று தீப்பிடித்துக்கொண்டது. இதை அடுத்து அந்த ஹெலிகாப்டர் 15 மீட்டர் அழமுள்ள கிடு கிடு பள்ளத்தில் நொறுங்கி விழந்தது.

இந்த விபத்தில் 17 பேர் பலியாகி இருக்கலாம் என்று தவாங் மாவட்ட போலீஸ் கமிஷனர் ஜி.பாடு தெரிவித்தார்.

இதுவரை 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சியவர்களின் உடலை காணவில்லை என்றும் அவர்களது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த விபத்தை பவன் ஹேன்ஸ் ஹெலிகாப்டர் சேவை நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த ஹெலிகாப்டரில் 2 குழந்தைகள் உள்பட 18 பயணிகள் இருந்தனர் என்று அந்த ஹெலிகாப்டர் கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று தவாங் மாவட்ட போலீஸ் கமிஷனர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்