முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.21 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ரெங்கநாதகேசவன், நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாவட்ட பிரதிநிதி எம்.முத்துலிங்கம், விழுப்புரம் தெற்கு மாவட்டம், சின்ன சேலம் ஒன்றியம், தென்சிறுவள்ளூர் காலனி கிளை செயலாளர் எஸ்.தங்கவேல் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் ரெங்கநாத கேசவன், முத்துலிங்கம், தங்கவேல் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்