முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் விவகாரம்: நக்கீரன் கோபால் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.12 - நக்கீரன் கோபால் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2-ம் தேதி வெளிவந்த நக்கீரன் வாரம் இருமுறை இதழில், `ஆட்சியாளர்கள் சதி... தடுமாறும் விஸ்வரூபம். வெளிவராத உண்மைகள் மற்றும் அரசே நடத்திய அராஜகம்' என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்த விளக்கமும் கேட்கப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. 

உண்மைக்குப் புறம்பாக உள்நோக்கத்துடன் செய்தியை வெளியிட்டு முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி வெளியிட்டது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500 மற்றும் 501-ன் கீழ் தண்டனைக்கு உரியதாகும். எனவே, இந்த செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், செய்தியாளர் இளையசெல்வன் ஆகியோர் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலையரசன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்