முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை துப்பாக்கி சூட்டில் காரைக்கால் மீனவர் படுகாயம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம். மார்ச்.8 - வேதாரண்யம் அருகே கோடியக்கரை நடுக்கடலில் இலங்கை ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில்

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முதுகில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார்.

காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டியாண்டி மகன் செல்வமணி. இவருக்கு

சொந்தமான இரு படகுகளில் கடந்த 2-ம் தேதி 13 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஒரு

படகில் இவருடைய தம்பி செண்பகம்(40), குமார் (45), தங்கராசு(35) முருகையன் (30) முருகேஷ் (30)

லெட்சுமணன் (35), சசிகுமார் (25) ஆகியோரும், மற்றோரு தம்பி பரமசிவம் (39) மதியழகன்

(30) வேலாயுதம் (35) வடிவேல் (30) ஜெகநாதன் (27) செந்தில் (33) ஆகியோரும் சென்றனர்.

இவர்கள் கடந்த 4 நாட்களாக அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம் போன்ற

பகுதிகளில் மீன் பிடித்து கொண்டு நேற்று கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடிக்க வந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் கோடியக்கரையிலிருந்து தென்கிழக்கே 15 கி.மி. தூரத்தில் மீன்

பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி

செண்பகம் மற்றும் பரமசிவம் ஆகியோரது படகில் உள்ள வலை, மீன்கள் உள்ளிட்ட பொருட்களை

கடலில் வீசுமாறு கூறினர். தொடர்ந்து சரமாறியாக 20 முறைக்கு மேல்

துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் படகின் முன்புறம் இருந்த செண்பகம் என்பவரின் முதுகில் குண்டு பாய்ந்ததில்

பலத்தக் காயம் அடைந்த அவர் படகிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் சக மீனவர்கள் செண்பகம்

முதுகிலிருந்த குண்டை அகற்றி முதலுதவி சிகிச்சையளித்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில்

கோடியக்கரை கடற்கரைக்கு வந்த மீனவர்கள் காயமடைந்த செண்பகத்தை ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம்

அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர். மேலும் க்யூபிரிவு, தனிப்பிரிவு, மத்தியபுலனாய்வுப்பிரிவு போலீசாரும்

விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் இலங்கை கடற்படையினரின் இந்த வன்முறை சம்பவத்தால்

மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்