முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபா இறக்கவில்லை அவர் எங்களுக்கு காட்சி அளிப்பார் பக்தர்களின் அசையாத நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ராஜமுந்திரி,ஏப்.- 25 - பகவான் சத்ய சாயி பாபா இறக்கவில்லை. அவர் எங்களுக்கு காட்சி அளித்துக்கொண்டே இருப்பார் என்று அவரது பக்தர்கள் இன்னும் அசையாத நம்பிக்கையில் இருக்கிறார்கள்.  உலகம் முழுவதும் 144 நாடுகளில் கோடிக்கணக்கான பக்தர்களை கொண்டவர் பகவான் சத்ய சாயி பாபா. இவர், தனது ஆசிரமத்திற்கு தொழில் அதிபர்கள், பணக்காரர்கள் மற்றும் பக்தர்கள் கொடுத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தனது சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் நல பணியை மேற்கொள்வதில் ஈடுபட்டார். பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள், கல்வி கூடங்கள், சமூக கூடங்களை நிறுவி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்துவந்தார். அவரது சொந்த மாநிலமான ஆந்திராவில் பல்வேறு சமூக நல திட்டங்களை செயல்படுத்தி வந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 212 கிராமங்களுக்கு குடிநீர் வசதியை சாய் பாபா செய்து கொடுத்தார். மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மலைசாதியினர் வசிக்கும் 25 கிராமங்களில் குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இந்த பலனை அனுபவிக்கும் மக்கள் சாய் பாபா மீது அளவில்லாத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். சாய் பாபா இறந்துவிட்டார் என்ற செய்தியை அவர்கள் கேட்டதும் அதிர்ந்துவிட்டனர். அவர் இன்னும் சாகவில்லை. அவர் எங்களுக்கு தொடர்ந்து காட்சி அளித்துக்கொண்டே இருப்பார் என்றும் கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்