முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுக்கு இந்தியா தாய் போன்றது: மோடி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத், ஏப். 8 - காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா ஒரு தேன் கூடு போன்றது. ஆனால் எங்களுக்கு தாய் போன்றது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றவே பா.ஜ.க. பிறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 

சி.பி.ஐ. யை பார்த்து பா.ஜ.க. அஞ்சவில்லை. காங்கிரஸ் சி.பி.ஐ. யை பயன்படுத்தி பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கொடுமைப்படுத்துகிறது. ஆனால் பா.ஜ.க. தொண்டர்களை மிரட்டும் முயற்சி தோல்வியுறும். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரசுக்கு இந்தியா ஒரு தேன்கூடு போன்றது. ஆனால் எங்களுக்கு தாய் போன்றது. காங்கிரஸ் திருந்தும் என்று காத்திருக்க வேண்டாம். அது ஒரு போதும் நடக்காது. பா.ஜ.க. வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இரண்டு கட்சிகளின் சிந்தனைகளும் வேறுபட்டது. நாட்டில் தண்ணீர் பிரச்சனை உள்ளது என்பது கூட அமைச்சர்களுக்கு தெரியவில்லை. இந்தியா எங்களுக்கு தாய் போன்றது, தாயின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் தலையெழுத்தை மாற்றவே பா.ஜ.க. பிறந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்