எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 16 - ஊரகச் சாலைகள் பராமரிப்புத் திட்டம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார் .சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒரு மாநிலத்தின் உயிர் நாடியாக விளங்குவது கிராமங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால் தான், மகாத்மா காந்தி கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு படித்த இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கிராமங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த எனது தலைமையிலான அரசு, கிராம முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிராம முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பது சாலைகள் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 74,981.29 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகள் உள்ளன. இச்சாலைகளை வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் பராமரிப்பது இன்றியமையாததாகும்.
இச்சாலைப் பராமரிப்புப் பணிகள், தற்போது நடப்பிலுள்ள ஊரக வளர்ச்சித் திட்டங்களின் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருவதால் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
இதனைக் கருத்திற் கொண்டு, கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகளை பராமரிக்க ஏதுவாக, ஊரகச் சாலைகள் பராமரிப்புத் திட்டம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இதற்கான நிதி மாநில நிதிக்குழு மற்றும் 13-வது நிதிக் குழு ஆகியவற்றின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமல்லாமல் சாலை அமைக்கும் செலவினத்தில் சேமிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பெருமளவில் ஏற்படுத்தி தூய்மைக்கு கேடு விளைவிக்கும் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கிராமப் பகுதிகளில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணியினை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கிராம ஊராட்சிப் பகுதிகளில் 153 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1254.13 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 1002 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன. இச்சாலைகள் அமைக்க 917 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டும் 1000 கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமப்புறத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, குடியிருப்புகளை அலகாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாபெரும் செயல்திட்டம் `தாய்' என்ற பெயரில் 2011-12-ல் என்னுடைய அரசால் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் கடந்த இரு ஆண்டுகளில் ஏறத்தாழ 97,000 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர, 45 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், மற்றும் 416 ஊராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கான பணிகள் 110 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 2011-12 ஆம் ஆண்டில் பயன்பாடற்று இருந்த 12,796 ஊரக மகளிர் சுகாதார வளாகங்கள் 170 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போல, 2012-13 ஆம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள 36,230 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3,416 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் பிரதானக் குடிநீர்க் குழாய்கள் 175 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 13,954 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து பணிகளும் ஏப்ரல், 2013 இறுதிக்குள் முடிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன. வட்டார அளவில், அந்தந்த வட்டாரத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் அலகாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திகழ்கின்றன. அந்தந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், தங்களின் அடிப்படை தேவைகளான வீட்டு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், சாலை வசதி மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுக வேண்டியுள்ளது. ஒன்றிய அளவிலான மக்கள் பிரதிநிதிகள் தங்களின் வட்டாரத்திற்கு தேவையான பணிகளை நிறைவேற்ற அரசு அலுவலர்களுடன் சேர்ந்து செயல்படவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முக்கிய மையமாக செயல்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். இதற்கென 50 கோடி ரூபாய் நிதி ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும். புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களில் பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, பெண்களுக்கான கழிவறை வசதி, கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு மற்றும் இதர வசதிகள் அமையப் பெற்றிருக்கும்.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், போதிய இட வசதி இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருப்பதும் எனது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் கட்ட மக்கள் பிரதிநிதிகள் இடமிருந்தும் கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. இதற்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 200 கிராம ஊராட்சி மன்றங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிராம ஊராட்சி மன்ற கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த புதிய கிராம ஊராட்சி அலுவலக கட்டடங்களில், மன்ற கூட்ட அறை, பொருட்களுக்கான தளவாட அறை, கழிவறை வசதி போன்ற வசதிகள் அமையப் பெற்றிருக்கும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், நியாய விலைக் கடைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், நுாலகக் கட்டடங்கள், இடுகாடு மற்றும் சுடுகாடுகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகள் மற்றும் விளையாட்டு மையங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளினால் சரிவர பராமரிக்கப்படாமல், மக்களால் முழுமையாக பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இந்த நிலையை சரி செய்திடும் வகையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாக ஊரகச் சொத்துக்களை பராமரிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ``ஊரகக் கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம்'' என்ற திட்டத்திற்காக 2013-2014 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் தமிழகத்திலுள்ள அனைத்து ஊரகப் பகுதிகளும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக உருவாக வழி வகுக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.