எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மீது கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெகூரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் வழக்கில் ஏற்கனவே 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று முன்தினம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், கூட்டுச் சதி செய்ததாகவும் கனிமொழி மீது அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற மே மாதம் 6 ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ்(பி.எம்.எல்.ஏ.)வழக்கு பதிவு செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீதமும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகளைக் கொண்ட கலைஞர் டி.வி.யின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழி எம்.பி. விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஏற்கனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் பெற்றவர்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.50 கோடி கைமாறியுள்ளது தொடர்பாகவும், இந்த உரிமம் பெற்றவர்களுக்கும் ஆ.ராசாவுக்கும் அதேபோல கனிமொழிக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
செசெல்ஸ் தீவைச் சேர்ந்த ஷிவா குரூப் கம்பெனி, ஹைடெக் ஹவுசிங் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகியவற்றிடம் இருந்து தி.மு.க. குடும்பத்தினருக்கு சொந்தமான கலைஞர் டி.வி. ரூ. 50 கோடியை பெற்றுள்ளது. இந்த பணப்பட்டுவாடா பல பரிவர்த்தனைகளாக செய்யப்பட்டுள்ளது. இந்த ஷிவா குரூப் கம்பெனி என்பது கடந்த 2008 ஆம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு கம்பெனிகளில் ஒன்றால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வான் டெலிகாம் கம்பெனியை நிர்வகிக்கும் டி.பி. குழுமத்தில் இருந்து கலைஞர் டி.வி. ரூ. 200 கோடியை பெற்றுள்ளது என்று சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆ.ராசாவை விசாரணைக்கு அழைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை துவக்கியபிறகு இந்த ரூ.200 கோடி பணத்தை கலைஞர் டி.வி. வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாகவும் சி.பி.ஐ. கூறியுள்ளது.
ரிலையன்ஸ் டெலிகாம் கம்பெனியின் 3 முக்கிய நிர்வாகிகளான குழும நிர்வாக இயக்குனர் கெளதம் தோஷி, இக்கம்பெனியின் இரண்டு துணைத் தலைவர்களான ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோர் மீதும் கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.