முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்காக மந்திரிகளை மாற்றிய பா.ஜ.க: சிரஞ்சீவி தாக்கு

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

தும்கூர்,ஏப்.30 - கர்நாடகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளால் 3 முதல்வர்களை மாற்ற வேண்டிய சூழல் பா.ஜ.க. வுக்கு ஏற்பட்டதாக நடிகரும், மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி கூறியுள்ளார். தும்கூர் மாவட்டம் பாவகடா, மதுகிரி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசார கூட்டஙஅகளில் கலந்துகொண்டு சிரஞ்சீவி பேசியதாவது, 

கர்நாடகத்தை கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.கவினர் ஆட்சி செய்கின்றனர். அவர்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. முறைகேடுகளால் முதல்வர் உட்பட அமைச்சர்கள் சிறைக்கு சென்றனர். இதனால் பா.ஜ.க. ஆட்சியில் 3 முதல்வர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பா.ஜ.க. வில் ஊழல்செய்தவர்கள் மலிந்துள்ளதால் மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் செயல்படுவது முடியாத விஷயமாகி விட்டது. முறைகேடு ம்ட்டுமே பா.ஜ.க ஆட்சியில் செய்துள்ள சாதனை ஆகும். பா.ஜ.க. வில் குடும்ப அரசியல் அதிகரித்துள்ளது. அந்த கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. ம.ஜ.த.வால் தேவகவுடா குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பயமில்லை. கர்நாடக எல்லை பகுதியான பாவகடாவில் குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. இதைப்போக்க காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சி புரிய வேண்டும். என்று சிரஞ்சீவி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்