முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் பந்த் போராட்டம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

மால்கன்கிரி(ஒரிசா),ஏப்.29 - ஒரிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுன்டர் ஒன்றில் ஒரு பெண் நக்சலைட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் நேற்று பந்த் போராட்டம் நடத்தினர். இந்த பந்த் போராட்டத்திற்கு தீவிரவாதிகளின் கோட்டை என கருதப்படும் சில இடங்களில் கூட ஓரளவே ஆதரவு கிடைத்தது. மற்ற இடங்களில் ஆதரவு கிடைக்கவில்லை. 

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டத்தில் பல மார்க்கங்களில் சில தனியார் பஸ்கள் மட்டும் ஓடின. ஆனால் அரசு பஸ்கள் ஓடவில்லை. மால்கன்கிரி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் இருந்தது. ஆனால் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கலுமெலா, மொட்டு, பாடியா போன்ற பகுதிகளில் பந்த்திற்கு ஓரளவே ஆதரவு கிடைத்தது. பதட்டமான இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், சிறை சாலைகள், ராணுவ டெப்போக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது குறித்து மால்கன்கிரி போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள எப்போதும் போலீசார் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்