எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.22 - கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தலைவன் பிரசாந்திடம் சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் மூலம் 20-க்கும் மேற்பட்ட தரகர்கள் கோடிகளை குவித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஹரிஸ் பஜாஜ், நர்பத், வேதாச்சலம், பப்பு கவுதம், தீபஜ் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் பிடிப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், வயர்லெஸ் போன்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட கும்பலுக்கு அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.
போலீசார் தேடியதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரசாந்த் நேற்று முன்தினம் மாலையில் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திடீரென சரண் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் டி.வி. கேமரா மேன்கள் பிரசாந்தை படம் பிடிப்பதற்காக அங்கு படையெடுத்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் இதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பிறகு பிரசாந்திடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
எத்தனை ஆண்டுகளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்? இதில் எத்தனை கோடிகளை சம்பாதித்துள்ளீர்கள்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு பதில் அளித்து பிரசாந்த் கொடுத்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனை ஒரு தொழில் போலவே நான் செய்து வருகிறேன். பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தினந்தோறும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்தேன். குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.
இப்படி கோடிக்கணக்கான ரூபாயை சூதாட்டம் மூலமாக நான் சுருட்டியுள்ளேன். என்னைப் போல பலர் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதுவே சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியது. இவ்வாறு பிரசாந்த் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரசாந்த் தென்ஆப்பிரிக்காவில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக புனேயில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
அவரை பிடிக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருவியாக பயன்படுத்தினர். பிரசாந்தின் தம்பி ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததுமே, பிரசாந்த் தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வெளியில் வந்துள்ளார்.
தனது தம்பி மேல் வைத்திருந்த பாசமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவரை சரண் அடைய வைத்துள்ளது. அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் பங்களா வீட்டில் சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பிக்கள் ராஜா சீனிவாசன், ஜெயச்சந்திரன், அரவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி சோதனை நடத்தி பாஸ்போர்ட் மற்றும் லேப்-டாப்புகளை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 தரகர்களில் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், நர்பத் ஆகிய 4 பேரை 10 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (22-ந் தேதி) நடக்கிறது. அப்போது 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
06 Nov 2025சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
-
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
06 Nov 2025சென்னை, அன்பு மணியை அமைச்சராக்கியது தவறு என்று ராமதாஸ் கூறினார்.
-
பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
06 Nov 2025சென்னை, தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க.
-
முதல்வரின் பெருந்தன்மையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
06 Nov 2025நெல்லை, முதல்வரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்ற
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள்: லல்லு பிரசாத் யாதவ் சூசகம்
06 Nov 2025பாட்னா, ரொட்டியை திருப்பி போடுகள் என்று லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிச. 2-ல் தொடங்குகிறது: மத்திய அமைச்சர் தகவல்
06 Nov 2025புதுடெல்லி, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
அபராதம் செலுத்தாததால் 30 ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
06 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்
06 Nov 2025புதுடெல்லி, ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மைதானங்கள் தேர்வு; அகமதாபாத்தில் இறுதிப்போட்டி
06 Nov 2025மும்பை: 2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி
-
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
06 Nov 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் - ட்ரம்ப் திட்டவட்டம்
06 Nov 2025வாஷிங்டன்: தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு
06 Nov 2025புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
-
வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. தகவல்
06 Nov 2025சென்னை: வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.


