முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் விஷசாராயம் குடித்து 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,மே,25 - ஆந்திராவில் விஷசாராயம் குடித்ததில் 3 பேர் பலியானார்கள் மற்றும் பலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

ஐதராபாத்திற்கு அருகில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஆல்வால் பகுதியில் பாலாஜி நகர் உள்ளது. இந்த நகரை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தெரியாமல் விஷசாராயத்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் 2  பேர் அதே இடத்தில் பலியானார்கள். மற்றொருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மற்றும் பலரின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்