முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தடை: ஆசிய தடகள போட்டி புனேவுக்கு மாற்றம்

வியாழக்கிழமை, 30 மே 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. 31 - ஆசிய தடகளப்போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் வரும் ஜூலை மாதம் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று ஆசிய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இலங்கை வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கையை தடகள சம்மேளனம் ஏற்கவில்லை. இதையடுத்து சென்னையில் ஆசிய தடகள போட்டிகளை நடத்த முடியாது என அவர் அறிவித்தார். இதையடுத்து இந்த போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய ஆசிய தடகளப்போட்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்