முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள நடிகை ஸ்வர்ணா பால்கனியில் விழுந்து படுகாயம்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

கொச்சி,ஜூன்.22 - பிரபலம் அடைந்து வரும் மலையாள இளம் நடிகை ஸ்வர்ணா தாமஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தொலைக்காட்சி தொடரில் அதிக அளவு நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகியுள்ள ஸ்வர்ணா தாமஸ், தற்போது புட்டி என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்துவிட்டு கடந்த புதன்கிழமை இரவு தனது தாயாருடன் ஸ்வர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் நின்று கொண்டியிருந்தார். அப்போது ஸ்வர்ணாவுக்கு மயக்கும் ஏற்பட்டு பால்கனியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் ஸ்வர்ணா உடம்பில் பல இடங்களில் காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்வர்ணா உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் நரம்பியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக ஸ்வர்ணாவுக்கு காய்ச்சல் இருந்தது. தற்போது காய்ச்சல் நின்றுவிட்டது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்