எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஜூலை. 1 - தேனி மாவட்டம், கோட்டூர், அரசு தொழில் நுட்ப கல்லூரியில் 238 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலையில்லா மடிக்கணினிகளையும், பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் பார்வை குறைபாடுகள் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கண்ணாடிகளையும் வழங்கினார்.
தேனி மாவட்டம் கோட்டூர் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கி தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,
தமிழக முதல்வர் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆண்டு காலங்களில் 4 பொறியியல் கல்லூரிகளையும், 36 கலை மற்றும அறிவியல் கல்லூரிகளையும், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 54 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை தமிழக முதல்வர் நிகழ்த்தி உள்ளார்.
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் போடி நாயக்கனூரில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணி ரூ. 95 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அக் கல்லூரியின் புதிய கட்டிடத்தினை தமிழக முதல்வர் மிக விரைவில் அவர்களது திருக்கரங்களால் திறக்க உள்ளார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கல்வி என்பது மிக மிக அவசியமாகும் என கருதி உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை-அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கி வருகிறார்.
பள்ளி குழந்தைகளிடையே காணப்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை போன்ற குறைபாடுகளினால் அவர்களுடைய கல்விதிறன் மற்றும் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் விலையில்லா கண்ணாடிகளையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் சமச்சீரான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழக முதல்வர் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
தொலை நோக்கு பார்வையுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு திட்டங்களும் சீரிய சிந்தனையுடன திட்டமிடப்பட்டு அதனை நிறைவேற்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு வருவாய் தொகையான ரூ. 86ஆயிரம் கோடியில் ஏழை எளியோர்களின் சமூக பொருளாதாரத்தை முன்னேற்றுவற்காக ரூ. 43ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கி சாதனை படைத்துள்ளார். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்க கூடிய அனைத்து விதமான உதவியினையும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.மாகலிங்கம், நகர்மன்றத் தலைவர்கள் சிவக்குமார், முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் செல்லமுத்து, தீபாவளிராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என்.ஆண்டி, தேனி மாவட்ட கோகோ விளையாட்டு கழகத் தலைவர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தேனி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றியகுழு உறுப்பினர் எஸ்.கே.வி. ரமணி, கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.டி. முத்துவேல், தனித் துணை ஆட்சியர் சிறப்புத்திட்டங்கள் (பொ) அஜினாபாத்திமா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. காஞ்சனா, கோட்டூர் அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் (பொ). கே.சுதர்சன், தேனி வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கலை செல்வராஜன், நாகரத்தினம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.