எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஜூலை. 1 - தேனி மாவட்டம், கோட்டூர், அரசு தொழில் நுட்ப கல்லூரியில் 238 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலையில்லா மடிக்கணினிகளையும், பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் பார்வை குறைபாடுகள் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கண்ணாடிகளையும் வழங்கினார்.
தேனி மாவட்டம் கோட்டூர் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கி தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,
தமிழக முதல்வர் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆண்டு காலங்களில் 4 பொறியியல் கல்லூரிகளையும், 36 கலை மற்றும அறிவியல் கல்லூரிகளையும், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 54 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை தமிழக முதல்வர் நிகழ்த்தி உள்ளார்.
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் போடி நாயக்கனூரில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணி ரூ. 95 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அக் கல்லூரியின் புதிய கட்டிடத்தினை தமிழக முதல்வர் மிக விரைவில் அவர்களது திருக்கரங்களால் திறக்க உள்ளார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கல்வி என்பது மிக மிக அவசியமாகும் என கருதி உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை-அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கி வருகிறார்.
பள்ளி குழந்தைகளிடையே காணப்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை போன்ற குறைபாடுகளினால் அவர்களுடைய கல்விதிறன் மற்றும் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் விலையில்லா கண்ணாடிகளையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் சமச்சீரான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழக முதல்வர் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
தொலை நோக்கு பார்வையுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு திட்டங்களும் சீரிய சிந்தனையுடன திட்டமிடப்பட்டு அதனை நிறைவேற்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு வருவாய் தொகையான ரூ. 86ஆயிரம் கோடியில் ஏழை எளியோர்களின் சமூக பொருளாதாரத்தை முன்னேற்றுவற்காக ரூ. 43ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கி சாதனை படைத்துள்ளார். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்க கூடிய அனைத்து விதமான உதவியினையும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.மாகலிங்கம், நகர்மன்றத் தலைவர்கள் சிவக்குமார், முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் செல்லமுத்து, தீபாவளிராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என்.ஆண்டி, தேனி மாவட்ட கோகோ விளையாட்டு கழகத் தலைவர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தேனி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றியகுழு உறுப்பினர் எஸ்.கே.வி. ரமணி, கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.டி. முத்துவேல், தனித் துணை ஆட்சியர் சிறப்புத்திட்டங்கள் (பொ) அஜினாபாத்திமா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. காஞ்சனா, கோட்டூர் அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் (பொ). கே.சுதர்சன், தேனி வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கலை செல்வராஜன், நாகரத்தினம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருச்சியில் அமையும் பெரியார் உலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.70 கோடி நிதியை கி.வீரமணியிடம் வழங்கினார்
18 Oct 2025திருச்சி, திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ