முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த ராஜபக்சே முடிவு

புதன்கிழமை, 3 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 4 - இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். இலங்கை அதிபராக 2010 ம் ஆண்டில் ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால் 2016 ம் ஆண்டு வரை அவர் பதவி வகிக்க முடியும். எனினும் அதிபர் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்து இரு ஆண்டுகளுக்கு முன்னதாக 2014 ம் ஆண்டிலேயே மீண்டும் அதிபர் தேர்தல் நடத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் யோகராஜன் கூறியுள்ளார். 

2016 ம் ஆண்டில் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ள ராஜபக்சே அடுத்த ஆண்டிலேயே தேர்தலை நடத்தி தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13 வது சட்ட திருத்தத்தை ஒழிக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளார். அதையடுத்து தேர்தலை நடத்தி வெற்றி பெற்று பிற உலக நாடுகளுக்கு தனது பலத்தை காட்ட விரும்புகிறார். 2014 ம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்துக்கு முன்பு இலங்கையில் தனது அதிகாரத்தை மேலும் நிலைநிறுத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். மாவட்டங்களுக்கு அதிகார பகிர்வு என்று கூறி வடக்கு, கிழக்கில் தமிழர்கள் இடையே பிரிவை ஏற்படுத்தவும் அவர் முயற்சிக்கிறார் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கணேசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்