முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தான்: அமெரிக்கா

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மே.5 - அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது அவன் நிராயுதபாணியாகத்தான் இருந்தான் என்று இப்போது அமெரிக்க தெரிவித்துள்ளது. கொடூரத் தன்மையுடைய சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன், கடந்த திங்கள் அன்று அதிகாலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் ராணுவ முகாம் உள்ள அபோடாபாத் நகரில் சொகுசு பங்களாவில் இருக்கும்போது அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். அமெரிக்க படையினர் அவனை சுட்டுக்கொலை செய்தபோது ஆயுதங்களுடன் இருந்தான் என்றும் மனைவியை கேடயமாக பயன்படுத்தினான் என்றும் அமெரிக்கா முதலில் தெரிவித்திருந்தது. தற்போது புதிய தகவலை அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் 2 ஹெலிகாப்டரில் சென்று பின்லேடன் தங்கியிருந்த சொகுசு பங்களாவில் புகுந்தது என்றும் அறை அறையாக வீரர்கள் நுழைந்து காலி செய்து கொண்டு போனபோது பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தான் என்றும் அவனிடம் ஆயுதங்கள் இதுவும் இல்லை என்றும் வெள்ளைமாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜாய் கார்நே நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அமெரிக்க படையினர் சுட்டபோது பின்லேடன் எதிர்த்து சண்டையிட வில்லை என்றும் தன் மனைவியை அவன் கேடயமாக பயன்படுத்தவில்லை என்றும் கார்நே கூறினார். அமெரிக்க படைகள் அந்த சொகுசு மாளிகைக்குள் சென்று வெறும் 40 நிமிடங்களிலேயே தாக்குதல் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பின்லேடனின் உடலை ஹெலிகாப்டரில் தூக்கிவந்துவிட்டனர் என்றும் கார்நே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்